Posts from the ‘சிந்திக்க’ Category
பொய்யைக் கண்டறிய சில வழிகள் !
( தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை) பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது. பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன. பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
நாய், சிறுத்தை, குரங்கு
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது. எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க [...]
மனிதனின் மூன்று முகங்கள்
பற்பல வகைகளில் குணாதிசயம், பழக்க வழக்கங்களுடைய மனிதர்களை தினந்தோறும் நாம் பார்க்கிறோம். பொதுவில், மனிதர்களுக்கு மூன்று விதமான முகங்கள் உள்ளதாக கடவுள் கூறுகிறார். அவரது கதையைக் கேட்போமா?
சிகரத்தை எட்டிய சிறிய தவளை
சிகரத்தை எட்டிய சிறிய தவளை வெகு காலத்திற்கு முன்பு…சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு.
விடுகதைகள்
விடைகள் பக்கத்தின் இறுதியில்.. 1. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்? 2. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்?
தேவதாசிமுறை – ஒரு கண்ணோட்டம்
தேவதாசிமுறை – ஒரு கண்ணோட்டம் சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் ஒரு மும்பை விலைமகளிரிடம் கேட்ட கேள்வி “இந்த விபச்சாரம் இழிவாக தோன்றவில்லையா?”. அதற்கு அந்த பெண் “அனைவரும் எதாவது ஒரு உடலுறுப்பை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறார்கள். நாங்களும் மற்றவர் கண்களுக்கு தெரியாத சில உறுப்புகளை பயன்படுத்தி சம்பாதிக்கிறோம்” என்றாராம்.முதலில் ஞாநி கேட்ட கேள்வியே சரியில்லை என்பேன். வாழ்க்கைச்சூழலும் வறுமையும் விரக்தியும் அவர்களை எப்படியொரு பதிலுக்கு ஆட்படுத்திருக்கிறது எந்த பகுத்தறிவுடைய பெண்ணும் (இன்றைய உலகில் சுகபோகமாக [...]
காசி ஆனந்தனின் நறுக்குகள்.
முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை ~நாயே! பன்றியே! குரங்கே!, நாற்காலி இங்கே வேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும் கட்டிலுக்கும். வீடு தூங்க கட்டில் நாடு தூங்க நாற்காலி உலகமைதி மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள் புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள். போராடிக்கொண்டிருக்கிறது அமைதி ஞானம் ஞானம் பெற்றது நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில் பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால். அடி கலையை கலைஞனை போற்றிய [...]
அப்பா-என் ஒவ்வொரு வயதிலும்
ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்? என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!







